வீடியோ: இரக்கமின்றி அடித்து கொல்லப்பட்ட குரங்குகள்... மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்... - கர்நாடகாவில் குரங்குகள் மீது தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16506916-thumbnail-3x2-monkey.jpg)
கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டத்தில் 4 குரங்குகளை அடித்து கொன்ற சிலர் உடல்களை புளியமரத்தில் கட்டித் தொங்கவிட்டனர். இதுகுறித்த காணொலி சமூகவலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே அந்தக் குரங்குகளின் உடல்களை ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அடக்கம் செய்தனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST